புதன், 17 ஜனவரி, 2024

தக்காளி பயிரைத் தாக்கும் ஊசித் துளைப்பான்




தக்காளி பயிரைத் தாக்கும் 
ஊசித் துளைப்பான் 

சேதத்தின் அறிகுறி:

இலைகள், தண்டுகள் சுரண்டியும், பழங்கள் ஊசி துவாரங்களுடன் காணப்படும்.
   
மேலாண்மை:

பூச்சி தாக்கிய பழங்கள், செடிகளை அகற்றி ஆழக்குழியில் புதைக்கவும்.

பயிர் சுழற்சியில் கத்தரி, மிளகாய் பயிரிடுவதை தவிர்க்கவும்.

பூச்சி தாக்காத நாற்றுகளை நடவும்.

ஏக்கருக்கு 16 இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்தழிக்கவும்.

தேவை ஏற்படின், ஏக்கருக்கு குளோரண்ட்ரனிலிப்ரோல் 18.5 % எஸ்.சி. 60 மி.லி. அல்லது சையாண்ட்ரணிலிப்ரோல் 10% ஓ.டி 60 மி.லி. அல்லது புளுபெண்டமைடு 20% டபிள்யூ.ஜி 60 மி.லி. அல்லது இண்டாக்சோகார்ப் 14.5% எஸ்.சி. 100 மி.லி. அல்லது அசாடிராக்டின் 1 அல்லது 5 சதவீதம் 200 - 300 மி.லி. தெளிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக