ஞாயிறு, 24 டிசம்பர், 2023

வெண்டை பயிரைத் தாக்கும் காவடிப் புழுக்கள்



வெண்டை பயிரைத் தாக்கும்
காவடிப் புழுக்கள்

சேதத்தின் அறிகுறிகள்:

புழுக்கள் இலைகளை கண்டபடி கடித்துச் சேதப்படுத்தும்.
இலைகள் முழுவதையும் சாப்பிட்டு, இலைகள் களைத்து போன்று தோற்றமளிக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

பாலோலான் 2 மி.லி / லிட்டர் தெளிக்கவும்.

செவ்வாய், 19 டிசம்பர், 2023

பப்பாளி பயிரைத் தாக்கும் சாம்பல் நோய்



பப்பாளி பயிரைத் தாக்கும்
சாம்பல் நோய்

அறிகுறிகள்

இலையின் மேற்பரப்பில் மைசிலியம் வளர்ந்திருக்கும் மற்றும் பூக்களின் காம்புகளில் மற்றும் பூக்களிலும் காணப்படும்.
இலைகள் பழுப்பு நிறமாக பாதிக்கப்பட்டு இருக்கும்.

கட்டுப்பாடு

டைனோகேப் 0.05% அல்லது கந்தகச் சத்து 0.25% அல்லது சைனோமேதியோனேட் 0.1% தெளிக்கவும்.

வெள்ளி, 15 டிசம்பர், 2023

பூசணிவகைகள் பயிரைத் தாக்கும் தண்டு வீக்க ஈ



பூசணிவகைகள் பயிரைத் தாக்கும் தண்டு வீக்க ஈ 

சேதத்தின் அறிகுறிகள்:

புழுக்கள் தண்டைக் குடைந்து தண்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்.
மாலத்தியான் @ 500 மி.லி / ஹெக்டேர்
டைமெத்தோயேட் @ 500 மி.லி / ஹெக்டேர்
மிதைல் டெமிட்டான் @ 500 மி.லி / ஹெக்டேர்
 

புதன், 13 டிசம்பர், 2023

ரோஜா பயிரைத் தாக்கும் நுனி கருகல்




ரோஜா பயிரைத் தாக்கும் நுனி கருகல்

அறிகுறிகள்

நுனியிலிருந்து கிளைகள் நோக்கி வாட ஆரம்பிக்கும்.
கிளைகள் கருப்பாகுதல்.
நோய் வேர் வரை பரவுகிறது. 
இதன் காரணமாக தாவரம் இறந்துவிடும்.

மேலாண்மை

கவாத்து செய்து பாதிக்கப்பட்ட இளம் தளிர்கள் நீக்கப்படவேண்டும். கவாத்து செய்த இடத்தில் சௌபட்டியா பசையை பயன்படுத்த வேண்டும்.

திங்கள், 11 டிசம்பர், 2023

கறிவேப்பிலை இலைப்புள்ளி நோய்




கறிவேப்பிலை இலைப்புள்ளி நோய்

கட்டுப்படுத்தும் முறைகள்:

கார்பன்டாசிம் 1 கிராம் மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

கந்தக மருந்துகளை இப்பயிருக்கு பயன்படுத்தக்கூடாது.

பருத்திப் பயிரைத் தாக்கும் பருத்தி தண்டுக் கூன் வண்டு




பருத்திப் பயிரைத் தாக்கும்
பருத்தி தண்டுக் கூன் வண்டு

தாக்குதலின் அறிகுறிகள்

நில மட்டத்திற்கு சற்று மேலே தாக்கப்பட்டத்அடித்தண்டுகளில் முண்டுகள் போன்ற வீக்கம் காணப்படும்.
இளம் பயிர் வாடிக் காய்ந்துவிடும்.

கட்டுப்பாடு : பொருளாதார சேதார நிலை :10 சத சேதம்

எக்டருக்கு 30 கிலோ கார்போபியுரான் மருந்தினை மண்ணில் தூவ வேண்டும்.
நடவு செய்த 20 நாட்கள் கழித்து தூரைச் சுற்றி மண் அணைக்க வேண்டும்.
அடி உரமாக தொழு எருவை எக்டருக்கு 25 டன் அல்லது வேப்பம் புண்ணாக்கு 250 கிலோவை தூவ வேண்டும்.
குளோர்பைரிஃபாஸ் 20EC (10மிலி/ 1 கிலோ விதைக்கு) மருந்து கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
குளோர்பைரிஃபாஸ் மருந்து (2.5 மிலி/ லிட்டர்) கலந்து விதைத்த 15 மற்றும் 30 ஆம் தூரைச் சுற்றி ஊற்ற வேண்டும்.

சனி, 9 டிசம்பர், 2023

தக்காளி பயிரைத் தாக்கும் இலை துளைப்பான்




தக்காளி பயிரைத் தாக்கும்
இலை துளைப்பான் 

தாக்குதலின் அறிகுறிகள்:

இலைகள் துளைக்கப்பட்டு வெண்ணிற கோடுகள் இலைகளில் காணப்படும்.
நாளடைவில் இலை வாடிக் காய்ந்து உதிரி விடும்.

கட்டுப்படுத்தும் முறை:

துளைக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கலாம்.
வேப்பங்கோட்டை வடிநீர் 3 சதம் தெளிக்க வேண்டும்.