ஞாயிறு, 3 மார்ச், 2024

கணிசமான வருவாய்க்கு பீரிபா பழம்

பீரிபா பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த செடிகள் உற்பத்தி செய்யும் விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது: 

மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்களை சாகுபடி செய்துள்ளோம். அந்த வரிசையில், பீரிபா பழம் சாகுபடி செய்துள்ளோம்.
இது, மலை பிரதேசங்களில் அதிகமாக விளையும் சீதா பழ குடும்பத்தை சேர்ந்தவையாகும்.
நிலங்களில் சாகுபடி செய்யும் போது, தண்ணீர் தேங்காதவாறு வடிகால்வாய் வசதி ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் சேதமின்றி வளர சவுகரியமாக இருக்கும். இந்த பீரிபா பழத்தை பொருத்தவரையில், ஒரு காம்பிற்கு ஒரு பழம் மட்டுமே விளையும். சந்தையிலும் வரவேற்பு அதிகமாக உள்ளது. இந்த பீரிபா பழ சாகுபடி மூலமாக கணிசமான வருவாய் ஈட்ட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: பி.கிருஷ்ணன், 98419 86400.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர : YouTube Facebook Twitter Instagram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக