வெள்ளி, 10 மே, 2024

வைகை அணையில் இருந்து 3000 கனஅடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து 3000 கனஅடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மதுரை:

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதற்காக வைகை அணையில் இருந்து 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கண்மாய்களில் நீரை தேக்கி வைப்பதற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக சிவகங்கைக்கும், 3வது கட்டமாக மதுரைக்கும் தண்ணீர் திறக்கப்படும்.

வைகை அணையில் இருந்து 3000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரேம்திவாகர் வேளாண்மை பின் தொடர : YouTube Facebook Twitter Instagram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக