வெள்ளி, 27 செப்டம்பர், 2024

உதகையில் 2-வது சீசனை ஒட்டி சிறப்பு மலர்க்கண்காட்சி

உதகையில் 2-வது சீசனை ஒட்டி சிறப்பு மலர்க்கண்காட்சி

உதகை: உதகையில் இரண்டாவது சீசனை முன்னிட்டு அரசு தாவரவியல் பூங்காவில் சிறப்பு மலர் கண்காட்சி தொடங்கியது. தற்போது 2-வது சீசன் தொடங்கி உள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகை வர தொடங்கியுள்ளனர். தாவரவியல் பூங்காவில் உள்ள அலங்கார மேடைகளில் 70 வகையான மலர் ரகங்கள் 10,000 தொட்டிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சிறப்பு மலர் கண்காட்சி ஒரு மாதம் நடைபெற உள்ளது; 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உதகை அரசு தாவரவியல் பூங்கா முழுவதும் 4.5 லட்சம் மலர் செடிகள் பூத்து குலுங்குகின்றன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக