ஆனால் தற்போது இடுபொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிர் செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் தற்போது கரும்பு அரவையின் அளவு குறைந்துள்ளது. இந்நிலையில் பதிவு இல்லாத வெளி மாவட்ட கரும்பை அதிக விலை கொடுத்து வாங்கி அரவை செய்தனர்.
தற்போது பதிவில்லாத கரும்பும் அரவைக்கு வரவில்லை. தற்போது அதிக கரும்பு இல்லாததால் சர்க்கரை உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால் நெல்லிக்குப்பம் இஐடி பாரி சர்க்கரை ஆலைக்கு கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டில் இருந்து சரக்கு ரயில் வேகன்கள் மூலம் 2600 டன் சர்க்கரை மூட்டைகள் வந்தது. இந்த சர்க்கரை மூட்டைகளை லாரிகள் மூலம் ஆலைக்கு கொண்டு சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக