இந்நிலையில் கடந்த 3 வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், காய்கள் மரங்களிலேயே வெடிப்பதால், பஞ்சு காற்றில் பறந்து விடுகிறது. ஒவ்வொரு மரத்திலும் குறிப்பிட்ட அளவில் காய்கள் வெடித்து வருவதால், அதனை பணியாளர்கள் மூலம் பறித்தாலும், அவர்களின் சம்பளத்துக்கு கூட வருவாய் கிடைக்காது. இதனால் விவசாயிகள் அந்த காய்களை பறிக்காமல் மரங்களிலேயே விட்டுள்ளனர். இது குறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக மிக குறைந்த விலைக்கே இலவம் பஞ்சு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்தாண்டு பருவநிலை மாற்றம் காரணமாக இலவம் காய்களின் உற்பத்தி மிகவும் குறைந்துவிட்டது. கனமழையால் இலவம் பிஞ்சுகள் உதிர்ந்து விட்டநிலையில், தற்போது வெயில் தாக்கம் காரணமாக இலவம் காய்கள் மரத்திலேயே வெடிக்க தொடங்கியுள்ளது.
எனவே அடுத்த மாதம் சீசன் தொடங்கும்போது, மரங்களில் உள்ள குறைந்தளவிலான காய்களை பறித்தாலும் அது பணியாளர்களின் சம்பளத்திற்கே பற்றாத சூழ்நிலையில் உள்ளது. தொடர்ந்து சில ஆண்டுகளாக இலவம் பஞ்சு விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் இலவம் பஞ்சுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக