நாற்றுகள் நடவு செய்து, ஒரு ஆண்டுக்கு பின், சவுக்கு மரங்களோட தண்டுப் பகுதியில் காயம் ஏற்படாத வகையில், ரொம்ப கவனமாக பக்க கிளைகளை வெட்டி கவாத்து செய்யப்படம். மூன்றே ஆண்டில் எங்கள் சவுக்கு தோப்பு, நல்ல அடர்ந்த காடு மாதிரி மாறியதால், பலவிதமான உயிரினங்கள் தங்குமிடமாகவும் மாறியது. 4வது ஆண்டு, ஒவ்வொரு மரமும் திரட்சியாக பெருத்து, 20 – 30 அடி உயரத்துக்கு வந்துவிடும். சவுக்கு மரங்களை வெட்டி, எடை போட்டு விற்கலாம் ஒரு ஏக்கரில் 25 டன் முதல் 30 டன் முதல் சவுக்கு மரம் கிடைக்கும். தற்போது ஒரு டன் ரூ.6500 விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில், அபிபாளையம் சுக்காலியூர், புலியூர் பகுதி, வேட்டமங்கலம், மூலமங்கலம் மற்றும் பல்வேறு கிராம பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலமாகவும் விவசாயிகள் சவுக்கு சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
குறிப்பாக கரூர் மாவட்டத்தில் தற்போது சுமார் 1000 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயிகள் சாகுபடி செய்வதில் தனி கவரும் செலுத்துகின்றனர். சவுக்கு மரத்திற்கு மரங்கள் போல அடிக்கடி செலவு செய்ய வேண்டியது இல்லை. மேலும் குறைவான நீர் போதுமானது விவசாயிகள் சவுக்கு மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக சவுக்கு மரத்தின் தேவையானது பந்தலமைப்பதற்கும், விவசாயத்திற்கும், பேப்பர் தயாரிப்பதற்கு தயாரிப்பதற்கு முக்கிய மூலப் பொருளாகவும் விளங்குகிறது. மேலும் சவுக்கு மரத்தில் தயாரிக்கப்படும் பேப்பர் மிகவும் தரமானதாக இருப்பதால் அதிக கிராக்கி உள்ளது. தமிழகத்தில் விழுப்புரம் புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே அதிக அளவு சவுக்கு சாகுபடி செய்யப்பட்ட போதிலும் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முக்கிய பண பயிராக சாகுபடி செய்வது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக