ஞாயிறு, 19 நவம்பர், 2023

தென்னை பயிரைத் தாக்கும் கருந்தலைப்புழு (அ) பச்சையம் தின்னும் இலைப்புழு




தென்னை பயிரைத் தாக்கும்
கருந்தலைப்புழு (அ) பச்சையம் தின்னும் இலைப்புழு 

இப்புழுவானது கடலோரப் பகுதிகளில் குறிப்பாக இந்தியா போன்ற தீபகற்ப நாடுகளில் அதிக சேதம் ஏற்படுகிறது. வருடம் முழுவதும் தாக்குதல் இருந்தாலும் கோடைகாலங்களில் இதன் எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது.

தாக்குதலின் அறிகுறிகள் :

இது அனைத்து வயதிலுள்ள மரங்களையும் தாக்குகிறது.
மரத்தின் அடிப்பகுதிகளில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால் கொண்டையின் மேற்பகுதியில் உள்ள 3-4 ஓலைகளைத் தவிர மற்ற ஓலைகள் அனைத்தும் காய்ந்து போய்விடும்.
ஓலையின் அடிப்பகுதியில் உள்ள பச்சையத்தைச் சுரண்டி இப்புழுக்கள் தின்றுவிடும்.
அதிகமாகத் தாக்கப்பட்ட மரங்கள் எரிந்து தீய்ந்து போனது போல் தென்படும்.

மேலாண்மை :

சாதாரண முறைகள்/உழவியல் முறைகள்:

தாக்கப்பட்ட ஓலைகளை வெட்டி அழித்து விட வேண்டும். குறிப்பாக கோடை காலம் துவங்கும் முன் செய்து விடுவது நல்லது.

இராசயன முறை:

தாக்குதல் ஒட்டுண்ணிகளால் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரிக்கும்போது, ​​ஓலையின் அடிப்பகுதிகளில் நன்கு படுமாறு டைக்குளோர்வாஸ் (100 EC) 0.02%, (அ) மாலத்தியான் 50 EC 0.05% (1 மி.லி/லி) (அ) குயினால்பாஸ் 0.05% (அ) பாஸலோன் 0.05% இவற்றில் ஏதேனும் ஒன்றைத் .

உயிரியல் முறை:

மெத்திலிட் மற்றும் பிராக்கானிட் என்ற குடும்பங்களைச் சார்ந்த ஒட்டுண்ணிகள் 1:8 என்ற விகிதத்தில் இலைகளின் அடிப்பாகத்தில் விடுவதால் புழுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
(அ) ​​3000 / ஹெ என்ற அளவில் விட வேண்டும். 
இந்த ஒட்டுண்ணிகளை கொண்டைப் பகுதியின் மேற்புறம் விட்டால் சிலந்தி போன்ற பூச்சி உண்ணிகள் அவசியம் ஏற்படும். 
எனவே இலையின் அடிப்பாகத்தில் இரசாயனத் தெளிப்பு செய்த பின் 3 வாரங்கள் கழித்து விட வேண்டும்.
யூலோபிட், பிராக்கிமேரியா, சாந்தோபிம்பிளா ஒட்டுண்ணிகள் கருந்தலைப் புழுவின் கூட்டுப்புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக