மரவள்ளி செதில் பூச்சி
தாக்குதலின் அறிகுறிகள்:
செடியின் தண்டு பகுதிகளை தாக்கும்.
தாக்கப்பட்ட இலைகள் நிறம்மாறியும், உலர்ந்தும் விடும்.
செடியின் வளர்ச்சி குன்றிவிடும்.
கட்டுப்படுத்தும் முறை:
பூச்சிகளற்ற (செதில்பூச்சிகள்) கரணைகளை நடவு செய்ய வேண்டும்.
தாக்கப்பட்ட தண்டினை அழிக்கவும்.
வயலில் காக்சோநிலிட் வகை பொறி வண்டுகளின் எண்ணிக்கையை அதிக படுத்த வேண்டும்.
மீதைல் டெமிட்டான் 0.25 சதம் தெளிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக